Published : 10 Jan 2019 08:38 AM
Last Updated : 10 Jan 2019 08:38 AM

360: மார்பகப் புற்றுநோய்; மீண்டுவர வழிகாட்டும் ‘ஆரோக்கிய’ மகள்!

டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் பிரியாஞ்சலி தத்தா  ‘ஆரோக்யா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம், மார்பகப் புற்றுநோய் தொடர்பாக நகர்ப்புற, கிராமப்புற மகளிருக்கு விழிப்புணர்வு ஊட்டிவருகிறார். தன்னுடைய அம்மாவுக்கு இந்தப் பாதிப்பு இருந்ததைக் கண்டு நொறுங்கிப்போன பிரியாஞ்சலி, கூச்சம், அலட்சியம் காரணமாக இந்நோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் வாய்ப்பைத் தவறவிடும் பெண்களுக்கு வழிகாட்டத் தொடங்கினார். இன்றைக்கு 5 லட்சம் பெண்களைச் சந்தித்து விழிப்புணர்வூட்டியிருக்கிறார். முன்கூட்டியே கண்டுபிடிக்கப்படாததால், இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 10-ல் எட்டு பெண்கள் இந்நோய்க்குப் பலியாகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x