

2025இல் உலக அளவில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மின்னணுக் கழிவை (e-waste) அதிகளவில் உற்பத்திசெய்த நாடாக இந்தியா இருக்கிறது. இதுவரை சுமார் 22 லட்சம் மெட்ரிக் டன் மின்னணுக் கழிவு வெளியேற்றப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் வெளியேற்றப்படும் மின்னணுக் கழிவின் அளவு இரட்டிப்பு ஆகலாம்.
கவனிக்க வேண்டியவை: அன்றாடம் பயன்படுத்தப்படும் திறன்பேசி, தொலைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்பதனப் பெட்டி, கணினி, பென் டிரைவ் போன்ற மின்னணுக் கருவிகள் பழுதாகலாம் அல்லது பயன்படுத்த முடியாத நிலையை அடையலாம்.