

இந்தியாவில் தேசியத் துணை - சுகாதாரத் தொழில்முறையாளர்கள் ஆணையச் சட்டம் 2021இல் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு மாநிலத் துணை - சுகாதாரத் தொழில்முறையாளர்கள் ஆணை விதி 2023இல் உருவாக்கப்பட்டு, கடந்த மாதம் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர்கள், மயக்கவியல் தொழில்நுட்பப் பணியாளர்கள், இயன்முறை மருத்துவம், கதிரியக்கத் தொழில்நுட்பப் பணியாளர்கள் உள்பட மருத்துவ உளவியலாளர்களுடன் மருத்துவ சமூகப் பணியாளர்கள் என 10 வகையான துணை - மருத்துவத் தொழில்முறைப் பணியாளர்கள் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.