

காசாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் சற்று அதிகமாக இஸ்ரேல் நடத்திவரும் இனக்கொலைப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாகச் சொல்லப்படும் டொனால்டு டிரம்ப்பின் ‘இருபது அம்சத் திட்ட’த்தை ரஷ்யா, சீனா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், எட்டு அரபு நாடுகள், மூன்று முஸ்லிம் நாடுகள் வரவேற்றுள்ளன. பிரதமர் மோடியும்கூட மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
திட்டத்தின் முதல் பகுதிக்கான பேச்சுவார்த்தையை இரு தரப்பினரும் விவாதித்து ஒரு முடிவை எட்டியுள்ளதாக ஹமாஸின் அரசியல் தலைவர் கலில்-அல்-ஹாயா ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்: “போரையும் காசா மக்கள் மீதான ஆக்கிரமிப்பையும் முடிவுக்குக் கொண்டுவர ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.”