

ஏமாற்றிவிட்டு தப்பிப்பவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள் ஆகிய இரண்டு வகையினரும் நிவாரணம் கேட்டு, நீதிமன்ற கதவுகளைத் தட்டுவதை நாம் அடிக்கடி பார்த்து வருகிறோம். ஆனால், இந்த இரண்டு வகையினராகவும் இல்லாமல், நீதிமன்றத்தையே ஏமாற்றலாம் என்ற எண்ணம் ஒருவருக்கு இருக்குமானால், அது மனித கபடத்தின் உச்சம் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட எண்ணம் கொண்ட ஒருவர் நடத்திய வழக்கு பற்றிதான் இங்கு சொல்லப் போகிறேன்.
ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவன், இரண்டாவது திருமணத்துக்கு முயற்சி செய்கிறான். அதற்காக ஒரு பெண் வீட்டாரை அணுகுகிறான். தான் விவாகரத்துப் பெற்றவன் என்று கூறி, அதற்கான நீதிமன்ற ஆணையைக் காட்டுகிறான்.