

புதிய சாலைப் பாதுகாப்பு விதிகளை ஆறு மாதங்களுக்குள் உருவாக்கும்படி அனைத்து மாநில அரசுகள், மத்திய ஆட்சிப் பகுதிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், இந்த முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மத்திய சாலைப் போக்குவரத்துத் துறையின் தரவுகளின்படி இந்தியாவில் 2023இல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 1,72,890 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 35,221 பேர் பாதசாரிகள். 2016இல் 10.44% இருந்த பாதசாரிகளின் உயிரிழப்பு எண்ணிக்கை, 2023இல் 20.4% அதிகரித்துள்ளது.