இயற்கையின் போக்கை அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்!

இயற்கையின் போக்கை அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்!

Published on

கடந்த ஆண்டு வெப்ப அலையால் இந்தியாவில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தாக்கல் செய்யும்படி மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

கோடைக்காலங்களில் நிலவும் சராசரி அதிகபட்ச அளவைவிட, அசாதாரணமான அளவுக்கு வெப்பநிலை அதிகரித்து - தொடர்ந்து நீடிப்பது ‘வெப்ப அலை’ எனப்படுகிறது. இதன் தாக்கம் இந்தியாவின் மத்தியப் பகுதி, வடக்கு, மேற்குப் பகுதிகளில் அதிகம் இருப்பினும், மற்ற பகுதிகளும் இதிலிருந்து தப்ப முடிவதில்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in