அரசமைப்புச் சட்டத்தை ஆட்சியாளர்கள் நீர்த்துப்போக வைக்கலாமா?

அரசமைப்புச் சட்டத்தை ஆட்சியாளர்கள் நீர்த்துப்போக வைக்கலாமா?
Updated on
2 min read

தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாரத ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவரும் நிலையில், ‘மாநிலத்தில் இடைத்தேர்தல்கள் இருக்காது’ என்று சட்டமன்றத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

‘அரசமைப்புச் சட்டத்தின் 10ஆவது அட்டவணையை முதல்வர் கேலி செய்கிறார்’ என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றத்தின் இந்த வார்த்தைகள் உணர்த்துகின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in