காலநிலை நெருக்கடிக்குக் காரணம் தனி மனிதர்களா?

காலநிலை நெருக்கடிக்குக் காரணம் தனி மனிதர்களா?

Published on

காலநிலை நெருக்கடி நம் காலத்தின் மிக முக்கிய சவால்களில் ஒன்று. எனவே, இதன் தாக்கங்கள் அதிகரிப்பதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது பற்றிய ஆழமான விவாதம் அவசியமாகிறது. மனிதச் செயல்பாடுகள் ஆதிக்கம் செலுத்துவதாகக் கருதப்படும் இந்தக் காலக்கட்டத்துக்கு நிலவியல் (Geological) அடிப்படையில் ‘மனித ஆதிக்க யுகம்’ (Anthropocene) என்கிற பெயரை அறிவியலாளர்கள் முன்மொழிந்துள்ளனர். சுமார் 12,000 ஆண்டுகளாக நிலவி வந்த ‘ஹோலசீன்’ (Holocene) என்கிற வெப்பநிலை யுகத்தைக் கடந்து, மனித குலம் அடுத்த யுகத்தில் அடியெடுத்து வைப்பதை இது உணர்த்துகிறது.

அறி​வியலர்​களின் கூற்றுப்படி மனித ஆதிக்க யுகம் என்ற வரையறை பெரும்​பாலும் புதைபடிவ எரிபொருள் பயன்​பாட்​டால் ஏற்படும் அதிகக் கரிம உமிழ்வை அடிப்​படை​யாகக் கொண்டே கட்டமைக்​கப்​படு​கிறது. ‘மனித ஆதிக்க யுகம்’ என்கிற சொல், நிலவியல் காலக்​கட்​டத்​தைக் குறிக்​கும் வகையில் பரவலாகப் பயன்​படுத்​தப்​பட்​டாலும், இந்தச் சொல் சுற்றுச்​சூழல் சீரழி​வைத் தூண்​டும் முதலா​ளித்துவப் பொருளாதார அமைப்பு​களைப் பொறுப்​புக்கு உள்ளாக்கு​வதைத் தவிர்க்​கிறது எனப் பல அறிஞர்கள் வாதிடு​கின்​றனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in