பேரறிவுச் சிலை

பேரறிவுச் சிலை
Updated on
3 min read

இந்தியத் துணைக்கண்டத்தின் பெருநிலவெளியும் முந்நீர்ப் பெருங்கடற்பரப்பும் கைகுலுக்கிக் கொள்ளும் குமரிமுனையில் ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு நடுவே குன்றென நிமிர்ந்து நிற்கும் குறியீடாக அய்யன் திருவள்ளுவரின் பேரறிவுப் பெருஞ்சிலை. இந்தச் சிலை இல்லாத குமரிக் கடலைக் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு உலகத் தமிழரின் உள்ளுணர்வில் அழகாக, ஆழமாக வேரூன்றிவிட்டது இந்தப் பெருஞ்சிலை.

வரலாற்றுச் சிறப்பு: 2,000 ஆண்டு​களுக்கு முன்பு தமிழில் எழுதப்பட்ட உலக இலக்கியம்; பொது யுகத்தின் 2,000 ஆண்டுகள் முடிந்து அடுத்த 1,000 ஆண்டு​களில் உலகம் அடியெடுத்து​வைக்கும் மிக முக்கியமான ‘மைல்கல்’ நாள் (01.01.2000); மூன்று கடல்கள் சந்திக்கும் முன்வாசல் போன்ற நீர்முற்​றத்தில் திருவள்​ளுவர் சிலை. இடமும் நாளும் எப்படிப் பொருந்​திவந்​துள்ளன அந்த வரலாற்றுத் தருணத்​திற்காக. இப்போது 25 ஆண்டு​களாகி​விட்டன. வெள்ளி​விழாக் கோலம்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in