Published : 05 Jun 2018 10:22 AM
Last Updated : 05 Jun 2018 10:22 AM

பிட்ஸ்: ஜீவன நீர்

கோடையையொட்டி, விலங்குகள், பறவைகளின் தாகம் தீர்க்கும் வகையில் பொது இடங்களில் குடிநீரை வைக்க உத்தரவிட்டிருக்கிறார் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் ஹுசைன். நம் வீட்டுலும் மொட்டை மாடி இருக்கிறது.

அகதியை அணுகுதல்!

பால்கனியில் அபாயகரமாகத் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையைத் துணிச்சலுடன் காப்பாற்றிய மாலியைச் சேர்ந்த அகதி மமவுது கஸாமாவுக்குக் குடியுரிமை, அரசுப் பணி வழங்கியிருக்கிறார் பிரெஞ்சு அதிபர் மெக்ரோன்.

பழங்குடி மக்களின் தனியரசு!

இடஒதுக்கீடு சார்ந்து தெலங்கானாவில் சுமார் 2,000 கிராமங்களில் பழங்குடியினர் தாங்களே தங்களுக்கான அரசு என்று அறிவித்திருக்கிறார்கள். ‘நமது கிராமம், நமது ஆட்சி’ எனும் முழக்கத்துடன், கறுப்புக் கொடி ஏற்றியிருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x