

‘வெப்புள்’ என்ற தலைப்பே நம் கண்களை விரியச் செய்கிறது, தனலாய் கொதிக்கும் கதையின் மாந்தர்கள் எடுத்த எடுப்பில் நமது மனதுக்குள் பிவேசித்துவிடுகிறார்கள். மீனா சுந்தர் எழுதிய இந்நாவல், எளிய மனிதர்களைப் பற்றி பேசும் எழுத்துக்களாக அமைந்து நமக்கு நெருக்கமாகி விடுகின்றன.
நாவலின் மனிதர்கள் ஊடாக தொன்மச் சான்றுகளை மீட்டெடுக்கும் வகையில் நாட்டார் வழக்கியல் பாடல்கள் நிரம்பக் கிடைக்கின்றன. மண்ணிலிருந்து கண்டெடுக்கப்படும் கற்பலகை ஒன்று கதாபாத்திரமாகவே உயிர்பெற்று படைப்பின் மையத்தோடு பிணைந்து கிடக்கிறது.