

ஊர் ஊராகச்சென்று தெருக்கூத்து நடத்தி, பிழைப்பு நடத்தும் ஓர் எளிய கலைஞனின் மகளான அல்லிப்பாவை, மனதளவில், உடலளவில் படும் வாதைகளை மையப்படுத்திய புதினம் ‘வதைமுகம்’.
கதைநாயகி படும் உடல் மற்றும் மன வதைகளைச் சித்தரிக்கும் நோக்கத்தில் இப்புனைவு அமைந்திருந்தாலும், பொதுவுடைமை சித்தாந்த களப்போராளிகளின் வாழ்க்கைத் துயரங்கள், அவர்கள் குடும்பத்தார் படும் வாதைகள் ஆகியவற்றையும் சேர்த்தே பேசுகிறது.