ஈரம் சுமந்த நினைவுகள்

ஈரம் சுமந்த நினைவுகள்
Updated on
1 min read

ஒவ்​வொரு மனிதரின் உயிரோடும் உணர்​வோடும் பிறந்த ஊரின் பெரு​மை​யும் என்​றும் கலந்தேயிருக்​கிறது என்​பர். தமிழாசிரியர், கவிஞர், எழுத்தாளர் என்​றறியப்​பட்ட உதயை மு.வீரையன், தான் பிறந்த ஊரின் சிறப்​பு​களை​யும் மனசுக்​குள் ஊறி நொதிக்​கும் மலரும் நினை​வு​களை​யும் அப்​படியே 44 தலைப்​பு​களின்​கீழ் சுருக்​க​மாக​வும் சுவை​யாக​வும் கோத்​துத் தந்​துள்​ளார்.

நான் ஏன் எழுதுகிறேன்? அரசி​யல், சமூக பொருளா​தார நிலை, நாடகக் கலை​யில் நாட்டம், கள்​ளுக்​கடைகளும் காவல் துறை​யும், பெரு​மழைப் புல​வர், போராட்​ட​மும் முடி​வும், சொல்ல மறந்த சில செய்​தி​கள் என்​கிற தலைப்​பு​களில் எழுதப்​பட்ட கட்​டுரைகள் வெறும் நினை​வுக்​குறிப்​பு​களாக மட்​டும் சுருங்​கி​வி​டா​மல், அரை நூற்​றாண்​டு​களுக்கு முன்​பிருந்த தமிழக கிராமமொன்​றின் சமூக எதார்த்த நிலை​யைக் குறுக்​கு​வெட்​டுக் கோணத்​தில் ஈரம் சுமந்த நினை​வு​களாகப் பகிர்​கின்​றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in