தவித்துப் பறக்கும் தனித்த குரல்

தவித்துப் பறக்கும் தனித்த குரல்
Updated on
2 min read

பெண் சார்ந்த உணர்​வு​களை நோக்கி குவிமையப்​படுத்​தப்​பட்ட கவிதைகள் இவை. சகோ​தரி சுமித்​ரா​வின் பல கவிதைகள் பெண் குறித்த கரிசனம் கொண்​ட​வை.

அவர் பறவை பற்றி பேசி​னால் அதை நேர்ப்​பொருளில் ‘பறவை’ என்று எடுத்​துக்​கொள்​ளலா​காது. அவர் குறிப்​பிடும் ‘பறவை’ என்​னும் சொல்​லுக்​குள் இருப்​பது குடும்​பச் சுமை​யின் கனத்​தால் அழுத்​தப்​பட்ட ஒரு பெண்​ணின் ஆன்​மா.

/ தாமத​மாய் கூடு திரும்​பும் / நீர்ப்​பறவை ஒன்​றின் / தனித்த குரல் / தவித்​துப் பறக்​கிறது / ‘பறவை’யை குறி​யீ​டாக்கி சொல்​லப்​பட்ட இன்​னொரு கவிதை ஆண் பெண் இயல்​பின் மற்​றொரு பரி​மாணத்​தைப் பேசுகிறது.

/ பறவையொன்று / கடலிலிருந்து கவ்​விச்​செல்​லும் / ஒற்றை மீன் போலத்​தான் / ஒரு பெண் ஒரு ஆணை... / / மடிவலை​யோடு / கடலின் அடிமடி​யில் / இறங்​கு​வது போலத்​தான் / ஓர் ஆண் பல பெண்​களை.../ உடலின்​பத்​திற்​கான வாய்ப்​பாகத்​தான் காதலை அணுகு​கிறான் ஆண்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in