

லெட்டீசியா இபானஸ்
இலங்கை தமிழ் நிலத்தின் வட்டார வழக்கு சார்ந்த எழுத்தின் அசலான உயிரோட்டம் மாறாமல், பிரெஞ்சு மொழி வாசகனுக்குக் கடத்திய மொழிபெயர்ப்பாளர் பற்றி கேட்டபோது, “லெட்டீசியா இபானஸ் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ் மொழியைத் திருத்தமாகக் கற்ற, நவீன இலக்கிய அறிவுள்ள பிரெஞ்சுக்காரர்.
மௌனியின் சிறுகதைகளை ஆய்வு செய்தவர். என்னுடைய ‘இச்சா' நாவலை மொழிபெயர்த்ததற்காக 2023இல் ‘பிரி பியர் - பிரான்சுவா கயே' விருது பெற்றவர். பெருமாள் முருகன், இமையம் ஆகியோரின் நாவல்களையும் பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்துள்ளார்.