

காலச்சுவடு சார்பில் பத்திரிகையாளர் ‘அரவிந்தன் நினைவேந்தல்' நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, மயிலாப்பூர் கவிக்கோ அரங்கத்தில் நடைபெற உள்ளது. அரவிந்தனுடன் இணைந்து பயணித்த பலர், இந்நிகழ்வில் புகழஞ்சலி செலுத்துகின்றனர்.
விந்தன் விருது விழா: சீர் வாசகர் வட்டம் சார்பில், 'விந்தன் விருது விழா' இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு, சென்னை, மயிலாப்பூர் கவிக்கோ அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் சீர் வாசகர் வட்டம் ஒருங்கிணைப்பாளர் தம்பி அறிமுக உரை நிகழ்த்துகிறார். 'விந்தன் கதைகள்' மக்கள் பதிப்பு நூலை எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் வெளியிடுகிறார்.