

பொதுமக்களிடையே அறிவியல் சிந்தனைகளைப் பரப்பும் நோக்குடன், சென்னை தரமணியில் உள்ள கணித அறிவியல் நிறுவனம் சார்பில் ‘சபாவில் அறிவியல்’ என்ற அறிவியல் சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது. ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்வில், அறிவியலின் பல்வேறு சுவாரசியமான பரிமாணங்கள் குறித்து நான்கு முக்கியப் பொது விரிவுரைகள் (ஆங்கிலத்தில்) வழங்கப்படவுள்ளன.
‘ஈர்ப்பு அலைகள்’ குறித்து தேபரதி சட்டர்ஜி, மீன்களிலிருந்து உணர்வுகள் வரை’ என்ற தலைப்பில் அம்ருதா சுவாமிநாதன், ‘அன்றாட எண்களின் ரகசிய வாழ்க்கை’ என்ற தலைப்பில் எஸ். விஸ்வநாத், ‘செயற்கை நுண்ணறிவு (AI) - எந்திரத்திலிருந்து வெளிப்படும் கடவுளா?’ என்ற தலைப்பில் பி. ரவீந்திரன் ஆகிய இந்தியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களின் விஞ்ஞானிகள் உரையாற்று கின்றனர்.