

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில், எஸ்.வி. ராஜதுரை எழுதிய ‘வரலாறும் நிகழ்கால அக்கறைகளும்’, ஆர்.பாலகிருஷ்ணன் மற்றும் சுந்தர் கணேசன் எழுதிய ‘ஜான் மார்ஷலை ஏன் கொண்டாட வேண்டும்?’, சு. தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘ஊருக்கு நூறுபேர்’, சுரேஷ் பிள்ளை எழுதிய ‘Essays on History’ ஆகிய நான்கு புதிய நூல்களின் வெளியீட்டு விழா, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் மார்ச் 27 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. Transglobal Technologies நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பால் பாண்டியன், ஃப்ரண்ட்லைன் இதழின் மேனாள் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறங்காவலர்கள் ஆர்.பாலகிருஷ்ணன், சு.தியடோர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.