இலக்கியம்
ஒரு பத்திரிகையாளரின் இந்திய நெடும்பயணம்
தமிழில் பயண இலக்கியங்கள் குறைவு. அதுவும் ரோட் ட்ரிப் எனப்படும் பயண வகைமையைக் குறித்த நூல்கள் அரிது. முன்னதாக வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொண்ட பயண அனுபவத்தை ‘Back பேக்’ என்கிற தலைப்பில் எழுதியிருந்தார் பத்திரிகையாளர் கி.ச.திலீபன். தற்போது இந்தியா முழுவதும் மேற்கொண்ட நெடும்பயணத்தை தீரா உலா என்கிற பெயரில் எழுதியுள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கி தவாங், தேஸ்பூர், காசி, அஜ்மீர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்கள், இமயமலை அடிவாரம் எனப் பல பகுதிகளுக்கு இந்தப் பயணம் நீண்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு வாகன முறைகளில் பயணித்திருக்கிறார்.
