பரிமாணங்கள் நிறைந்த கதைகள்

பரிமாணங்கள் நிறைந்த கதைகள்
Updated on
1 min read

இசையைப் போன்றே எங்​கும் பரவிப்​படர்ந்து காற்​றி​லும் தவழ்ந்து மனித மனங்​களை நிறைக்​கும் வல்​லமை பெற்​றிருப்​பது கதை. “கவிதைக்கு நெருக்​க​மாக, புதிர்​வழி​யின் வாசலாக, ஜென் தியான​மாக, ஒரு கைக் கடலாக, பலூனில் சிறைப்​பட்ட காற்​றாக, இரு கரங்​களின் கூட்​டுக்​குள் ஒளிரும் சுட​ராக, வரலாற்​றின் நினை​வாக, வாழ்​வின் முரணை உணர்த்​தும் எறும்​பின் கடி​யாக குறுங்​கதைகள் இருக்​கலாம்” என்​கிறார் உதயசங்​கர்.

இந்த எல்​லா​வித அனுபவத் தெறிப்​பு​களை​யும், இவற்​றுக்கு அப்​பால், வாசிக்​கும் வாசகரின் மனோல​யங்​களுக்கு இசைய இன்​னும் பல அனுபவங்​களைத் தரும் சாத்​தி​யங்​களும் அவரின் ‘என்​று​முள இசை’ தொகுப்​பில் இடம் பெற்​றிருக்​கின்​றன. ஆலாபனை​யில் எழுந்து காற்​றில் எங்​கும் பரவிக் காதுகளை​யும், கேட்​போரின் மனங்​களை​யும் நிறைக்​கும் இசையை ஒரு கோட்​டுச் சித்​திர​மாகத் தந்​திருக்​கிறார் டாக்​டர் உ. நவீ​னா. அது நூலின் அட்​டைப் படமாக இடம் பெற்​றிருக்​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in