

வழக்கமான கதைசொல்லல் முறையைத் தமிழவன் எழுத்துகள் பின்பற்றுவதில்லை. அவர்தம் எழுத்தில் புதைந்திருக்கும் கதையை வாசகர்தான் பொருள்படுத்த வேண்டும். பல்வேறு பொருண்மைகளில் தமிழவனின் எழுத்துகள் அமைந்திருப்பது தமிழுலகம் அறிந்த கதைதான்.
இவர் 1992ஆம் ஆண்டு எழுதிய ‘சொற்பொழிவுகள்’ எனும் சிறுகதையை எழுத்தோவியமாக்கி ஒரு நூலை அளித்திருக்கிறார் மாளவிகா. தொண்ணூறுகளில் தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் முழங்கிய பேச்சாளர்களைப் பகடிசெய்து எழுதப்பட்ட கதை இதுவாகும். இன்றைய நிலையிலும் இக்கதை மிகப் பொருத்தமாக உள்ளது.