

பேரிடர் நிகழ்வுகளைக் களமாகக் கொண்டு புனையப்பட்டுள்ள நாவல் ஜே.கே. பிரதாப்பின் ‘சிவப்பு நிறத் தலைகவசம்’. தொழிற்சாலையைப் பார்வையிடுவதற்காக மாணவர்களை அழைத்துச் செல்லும் அந்த நாளில் நடந்தேறும் இருவேறுபட்ட முக்கியமான பேரிடர் சம்பவங்களைக் கவனத்தில்கொண்டு புனைவானது எழுதப்பட்டிருக்கிறது.
திருச்சி தொழிற்சாலை தீ விபத்தில் உயிருக்குப் போராடும் இரு தொழிலாளர்களையும் பேராசிரியர் பாண்டியன், தம் மாணவப் படைகளைக் கொண்டு காப்பாற்றுகிறார்.