

ஆதி மனிதன் காலத்தில் இருந்து, இன்று வரை மனிதன் தொடர்ச்சியாக மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறான். அந்த வகையில், உலக மருத்துவத் துறைக்கு தமிழர்கள் வழங்கிய மாபெரும் கொடை ‘சித்த மருத்துவம்’ என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.
‘நோயற்ற வாழ்வுக்கு உடல் ஆரோக்கியம் மட்டும் போதாது’ என்ற உண்மையை உரைத்த சித்தர்கள், ‘உடல் ஆரோக்கியத்தோடு, மன ஆரோக்கியத்தையும் சேர்த்து பராமரிப்பதன் மூலமே நோயற்ற வாழ்வு வாழ முடியும்’ என வலியுறுத்தினார்கள்.
இந்நூலில் நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது போல, 4,448 நோய்கள் பற்றியும், அவற்றில் தீரும் நோய்கள், தீரா நோய்கள் பற்றியும், அந்த நோய்களை நீக்குவதற்கான மருத்துவம் பற்றியும் நம் சித்தர்கள் மிக விரிவாக விளக்கியிருக்கிறார்கள்.