

ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் இந்தியப் போராளி என பூலித்தேவன் அறியப்படுகிறார். அவரது வரலாற்றை ஆழ்ந்து படித்தவர்களுக்கு சேத்தூர் ந. இராசையாவைத் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.
பூலித்தேவன் பற்றிய செய்திகளைத் தேடித் தேடி ஆவணப்படுத்தியவர் இவர். 2022இல் தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது. ராஜபாளையம் அருகில் உள்ள சேற்றூரில் பிறந்த இவர், ‘சேறை ந. ராசையா’ என ஊர்ப்பெயரை அடைமொழி ஆக்கிக்கொண்டதோடு, ஊர் குறித்து வெவ்வேறு பரிமாணங்களில் பல வரலாற்றுக் கட்டுரைகளும் எழுதினார்.