

மாறிவரும் உலகப் பொருளாதாரமும், நடுத்தர வர்க்கத்தின் அன்றாடப் போராட்டமும் தலைமுறைகள் கடந்து தொடர்கின்றன. வாழ்க்கையின் இந்தச் சுழலில் சிக்கித் தவிக்கும் எளிய மனிதர்களுக்கு, ஒரு பொருளாதார வழிகாட்டியாக உதவி செய்கிறது சோம வள்ளியப்பனின் ‘சம்பளம் பத்தலையா?’ எனும் இந்நூல்.
தொழில்நுட்பத்தின் வரவால் பழைய வர்த்தக ஆட்டங்கள் கலைக்கப்பட்டு, புதிய ஆட்டக்காரர்கள் களம் கண்டுள்ளனர். உலக மாற்றத்தைப் புரிந்து கொண்டவர்கள் புதிய வழிகளில் வருமானம் ஈட்ட, ஏனையோர் தவிக்கின்றனர். இந்த விழிப்புணர்வை இந்நூல் ஏற்படுத்துகிறது.
செலவை வளரும் பிள்ளைக்கும், வருமானத்தை ஆடைக்கும் ஒப்பிடும் ஆசிரியரின் உவமை சிறப்பானது. பிள்ளையின் வளர்ச்சியைப் போல தேவைகளும் வளரவே செய்யும்; அதற்குப் பணவீக்கமும் ஒரு முக்கிய காரணம்.