அகத்தின் தவிப்புகள்

அகத்தின் தவிப்புகள்
Updated on
2 min read

மனித மனங்​களின் ஆழமான அக உணர்​வு​களுக்​கும், எந்​திரத்​தன​மான அன்​றாடப் புற வாழ்​வுக்​கும் இடையே நிகழும் முரண்​களைத் தன் எளிய கதை மாந்​தர்​களின் வழியே அடை​யாளம் காட்டி வருபவர் எழுத்​தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

மொத்​தம் 16 கதைகள் நிறைந்த இவருடைய ‘சாய்ந்​தாடும் குதிரை’ சிறுகதைத் தொகுப்​பு, தன் அசாத்​தி​ய​மான வாழ்​வியல் சித்​தரிப்​பு​களால் வாசக நெஞ்​சில் தீராத உணர்​வெழுச்​சியை ஏற்​படுத்​தி, நெருக்​க​மாகத் தன்னை இணைத்​துக் கொள்​கிறது.

தொகுப்​பின் முதல் கதை​யான ‘ஆப்​பிளு​டன் ஒரு நடனம்’ நவீன மனிதனின் எந்​திரத்​தன​மான வாழ்​வைப் பேசுகிறது. கைநிறைய ஊதி​யத்​துடன் உயர்ந்த பொறுப்​பில் இருந்​தும், கார்ப்​பரேட் வாழ்க்​கை​யால் சலிப்​பின் உச்​சத்​துக்கே செல்​கிறார் விஜய​ராகவன்.

தனது அலைபேசித் திரை​யில் தோன்​றும் துனிசிய இளம்​பெண்​ணின் ஆப்​பிள் நடனம், அவருக்​குள் தூங்​கிக் கிடந்த பால்ய காலச் சுதந்​திரத்​தைத் தட்​டி​யெழுப்​பு​கிறது. அவளைப் போலவே தானும் ஆட வேண்​டும் என்ற ஏக்​கத்​தில் அவர் ரகசி​ய​மாக முயன்​றாலும், அவரது குடும்​பமே ஒரு ‘சமூகக் கண்​காணிப்பு அமைப்​பாக’ மாறி அவரது கனவைச் சிதைக்​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in