

இந்தியா 1947இல் விடுதலை அடைந்த மகிழ்ச்சியைத் தாண்டி, நாட்டின் எதிர்காலத்தை வளப்படுத்த பொருளாதாரமும் தொழிலும் வளர்ச்சி பெற வேண்டிய பெரும் கவலை அப்போது இருந்தது. இத்தகைய வளர்ச்சி சாத்தியமாக ரயில்வே துறையை மேம்படுத்த வேண்டிய தேவை இருந்தது.
ரயில் பெட்டி மற்றும் இன்ஜின்களுக்கு இறக்குமதியை நம்பியிருந்த நிலையை மாற்ற, இந்தியா குடியரசு நாடானதற்குப் பிறகு இரயில் உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.