

சிந்தனையுடன் உணர்ச்சியும் கலந்து வெளிப்படுத்துவதே கவிதை என்பர். அதில் தனிமனித அனுபவமும் சேர்கையில் உயிர்ப்பு கூடுதலாகிறது. அத்தகைய அனுபவச் சாரத்தின் கவிதை உணர்வுகளாகப் பீறிட்டுக் கிளம்பியுள்ளன கவிஞர் ப.நடராஜன் பாரதிதாஸின் கவிதைகள்.
கண்டதையும், கேட்டதையும் முன்வைத்து எழுதுதல் ஒருவகையான எழுதுமுறையென்றால், தான் வாழ்ந்துபெற்ற அனுபவத்தை எழுத்தாக்குதல் என்பது வீர்யமிக்க எழுத்தாகத்தானே அமையும். அப்படியாக, ஒரு முடிதிருத்தும் தொழிலாளியாக இருப்பதால் ஒவ்வொரு கவிதையையும் உள்ளுணர்ந்து எழுதியுள்ளார்.