

எழுத்தாளர் பெருமாள்முருகனின் புனைவுகள், அல்புனைவுகள், பிறமொழிகளுக்குச் சென்றுள்ள அவர்தம் ஆக்கங்கள் குறித்த இருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் திருச்சி, தந்தை பெரியார் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் பெருமாள்முருகனின் படைப்புகளை நுட்பமாக அவதானித்து எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், இளம் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் தங்களின் தீர்க்கமான கட்டுரைகளை வழங்கியிருக்கின்றனர்.