பெண்ணெழுத்தின் ஆவணம் | நூல் நயம்

பெண்ணெழுத்தின் ஆவணம் | நூல் நயம்
Updated on
2 min read

காலந்​தோறும் பல்​வேறு தடைகளை​யும் ஒடுக்​கு​முறை​களை​யும் புறக்​கணிப்​பு​களை​யும் தாண்​டிப் பெண்களின் கரங்​கள் எழு​தி​யபடிதான் இருக்​கின்​றன. ஆனால், வரலாற்​றின் சுவடு​களில் அவை அனைத்​தும் பதிவுசெய்​யப்​படு​வதே இல்​லை.

விதி​விலக்​கு​களாக அங்​கொன்​றும் இங்​கொன்​று​மாகச் சிலர் கொண்​டாடப்​பட்டு இருக்​கின்​றனரே தவிர எழுதவரும் பெரும்​பாலான பெண்​களின் பெயர்​கள் இருட்​டடிக்​கப்​படு​வது​தான் வரலாறாக இருக்​கிறது. இந்​தச் சிறுமை​யைப் பொறுக்க முடி​யாமல், பெண்​ணெழுத்​துகளைப் பதிவுசெய்ய வந்​தவர்​களில் தாயம்​மாள் அறவாணன் சமகால முன்​னோடி.

அன்னை தெரசா மகளிர் பல்​கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலை​வ​ராக இவர் பணி​யாற்​றிய​போது எழுதத் தொடங்​கித் தற்​போது வரை பெண்​கள் சார்ந்து 23 நூல்​களை தாயம்​மாள் எழு​தி​யிருக்​கிறார். அவ்​வை​யார் என்​பவர் ஒரு​வரல்​லர்; பலர் அந்​தப் பெயரில் எழு​தி​யிருக்​கிறார்​கள் என்​ப​தைப் பதிவுசெய்​யும் நோக்​கில் இவர் எழு​திய ‘அவ்​வை​யார் படைப்​புக் களஞ்​சி​யம்’ சிறந்த ஆய்வு நூல்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in