

இசைக்கு மயங்காதவர் யாரும் இல்லை! இசையை ரசிப்பதற்கு ஆர்வம் மட்டும் இருந்தால் போதும், அனைவராலும் இசையை ரசிக்க முடியும். ஆனால், அந்த இசையில் என்னென்ன கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை எல்லாராலும் எளிதாகச் சொல்லிவிட முடியாது.
‘இசை என்பது பெருங்கடல்’ என்று சொல் வதைப் போலவே பழந்தமிழரின் இசைக் கருவிகளும் ஏராளமாக இருக்கின்றன. அந்த இசைக் கருவிகளில் அறிவியலும் கணிதமும் கச்சிதமாகக் கையாளப்பட்டிருக் கின்றன என்பதை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது.