பிரெஸ்​டர் ஜானும் இளவரசர் ஹென்​றி​யும் | நூல் நயம்

பிரெஸ்​டர் ஜானும் இளவரசர் ஹென்​றி​யும் | நூல் நயம்
Updated on
1 min read

பயணங்​களே மனிதர்​களின் வளர்ச்​சிக்​கும் முன்​னேற்​றத்​துக்​கும் வித்​திட்​டன. ஆதி​கால மனிதர்​கள் உணவு தேடி, தங்​கள் வாழ்​வா​தா​ரத்​துக்​காகப் பயணங்​களை மேற்​கொண்​டனர். 15ஆம் நூற்​றாண்​டில் புதிய நாடு​களைக் கண்​டறி​யும் ஆவல் பலருக்​கும் ஏற்​பட்​டது.

புதிய நிலப்​பகு​திக்​குப் பயணித்​தவர்​கள் அங்​குள்ள இயற்கை வளம், விளைந்த பொருள்​கள், மக்​களின் வாழ்க்கை போன்​றவற்​றை​யும் பதிவு செய்​தனர். கண்​டும் கேட்​டும் பதிவு செய்த தகவல்​களில் பிழைகளும் கற்​பனை​களும் மிகுந்​திருந்​தன.

இந்​தத் தகவல்​களை அறிந்​தவர்​கள், அந்த நாடு​களைக் காணும் ஆவலில் அவற்றை நோக்​கிப் படையெடுக்க ஆரம்​பித்​தனர்.

பிரெஸ்​டர் ஜான் எனும் மன்​னர் தன் நாட்​டைக் குறித்​து, ‘எங்​கள் நாட்​டில் உள்ள சுனை​யின் நீரைப் பரு​கிய​வர்​கள் சாகாவரம் பெறு​வார்​கள்.

மிடிரியோஸி என்​கிற அரிய ரத்​தினத்தை அணிந்​தால், பார்வை போனால்​கூட மீண்​டு​விடும். நெருப்​பில் வாழும் சாலமண்​டர் விலங்​கைச் சுற்றி மெல்​லிய சவ்​வால் உரு​வாகும் பட்​டுநூலால் ஆடைகளைத் தயாரிக்​கிறோம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in