

ஏற்கெனவே சொல்லப்பட்டுவிட்ட பல கதைகளின் சாறுகளில் இருந்தே கதைகளைப் பிழிவது இங்கு அதிக மாக இருக்கிறது. அது சக்கையாகி, துகளானப் பின்னும் அத்துகளில் இருந்தும் பின்னுகிற கதைகளில் எதைப் புதிதாகக் கண்டுவிட முடியும்? அந்தக் கூறியது கூறல் ஆயாசமாக இருந்தாலும் அதைக் குறையென்றும் சொல்லிவிட முடியாதுதான்.
நீர் ஒன்றென்றாலும் நதி, வாய்க்கால், குளம், குட்டை என விரிகிற அதன் வகைகள் வேறுதானே! அதிலிருந்து முற்றிலும் விலகி, வியக்க வைக்கிற தொகுப்பாக வந்திருக்கிறது, ‘ஒரு கற்றை மயிர்’.