‘தோழமை’ மிக்க பெண்ணியக் கதைகள் | நூல் நயம்

‘தோழமை’ மிக்க பெண்ணியக் கதைகள் | நூல் நயம்
Updated on
1 min read

ஒடியா எழுத்​தாளர் பராமிதா சத்பாதி 2016இல் சாகித்ய அகாதமி விருது பெற்​றவர். தன் உழைப்​பி​னாலும், அன்​பி​னாலும் சமூகத்​திற்கு புத்​துணர்ச்சி அளிக்​கிறாள் பெண். ஆனால் அவளை உலகம் எவ்​வாறு விளங்​கிக் கொண்​டது என்​பது​தான் இத்​தொகுப்​பின் பிர​தான கேள்​வி​யாக இருக்​கிறது.

இத்​தொகுப்​பில் உள்ள பல கதைகளி​லும் பெண்ணை புரிந்​து​கொள்​வது ஆண்​களல்ல, பெண்​கள்​தான் என்​பது மையச்​சர​டாக உள்​ளது. உடலில் தோன்​றிய வெண்​புள்ளிகளால், குடும்​பத்​தினரும் மற்​றவர்​களும் வில​கி​னாலும், பள்​ளித்​தோழி, முதிர்​பருவ காலத்​தில் வந்து தேறு​தல் சொல்ல, அதில் ஆறு​தல் கொள்​ளும் மாயா; உறவினர்​கள் பலரும் வில​கிச் சென்​று​விட அடுக்​ககத்து தனிமை வாழ்க்​கை​யில், விற்​பனை பிர​தி​நிதியான ஓர் இளம்​பெண்​ணின் தோழமை​யைப் பெறும் சுனயனா போன்ற பெண்​களை வெவ்​வேறு கதைகளில் பராமிதா சத்பாதி முன்​னிறுத்​துகிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in