

பேராசிரியராகவும், மூட்டா இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளராகவும் அறியப்பட்ட பெ.விஜயகுமாரின் வாசிப்பு அனுபவப் பகிர்வுகளின் தொகுப்பே இந்நூல்.
உலகளவில் புகழ்பெற்ற நூல்களைப் பற்றியும், தமிழில் பரவலாக பேசப்பட்ட நூல்களைப் பற்றியும் எழுதப்பட்ட 17 அறிமுகக் கட்டுரைகளில், அந்த நூல் குறித்த வாசிப்பனுபவத்தை மட்டும் பகிராமல், அதனோடு தொடர்புடைய பிற சமகாலச் சமூக நிகழ்வுகளையும் தொட்டுக்காட்டி எழுதியிருப்பது சிறப்பு.