

‘உப்பு கரிக்குது’ என்றவாறே கடல்நீரைக் கையிலேந்திச் சுவைத்தபிறகு முகம் கோணுவது போன்ற அனுபவத்தைத் தருகிறது சப்திகாவின் எழுத்தில் வடிக்கப்பட்டிருக்கும் ‘நண்டு பொட்டலம்’.
நெய்தல் நில வாழ்வை, அங்கிருப்பவர்களின் சிந்தனைகளை, காலம்காலமாக அங்கு குடிகொண்டிருக்கும் கலாச்சாரத்தை, துயரம் நிறைந்த அனுபவங்களை இதிலிருக்கும் 25 சிறுகதைகள் சொல்கின்றன. ஒவ்வொன்றும் ஒருவிதம்.
‘யாத்தினங்க’, ‘போவலியா’, ‘கரையுத’ என்று தமிழகத்தின் தென்கோடியிலிருக்கும் கடற்புரத்தில் காற்றோடு கலந்துவிட்ட பல வார்த்தைகள் அவற்றிலிருக்கின்றன.