நூல் வெளி | உள்ளாட்சியின் உன்னதத்தை புரியவைக்கும் நூல்

நூல் வெளி | உள்ளாட்சியின் உன்னதத்தை புரியவைக்கும் நூல்
Updated on
2 min read

நாம் குடிமக்​களை ஒரு பயனாளி​யாக​வும், வாக்​காள​ராக​வும், மனு​தா​ர​ராக​வும், நுகர்​வோ​ராக​வும் மட்​டுமே மாற்றி வைத்​திருக்​கிறோம். ஆனால், அவர்​களைப் பொறுப்​புணர்​வுள்ள செயற்​பாட்டு குடிமக்​களாக மாற்ற வேண்​டியது அவசி​யம்.

அந்த மாற்​றத்​திற்​கான புரிதலைக் கிராம சபை வழி​யாக உரு​வாக்க வேண்​டும். அதற்​கான சிறந்த வழி​காட்டி நூலாக இந்​தப் புத்​தகம் விளங்​கு​கிறது. புறக்​கணிக்​கப்​பட்ட மக்​களின் வாழ்​வியல் தேவை​களை நிறைவேற்​று​வதே கிராம சபை​யின் ஆத்​மார்த்​தப் பணி என இந்த நூல் வலி​யுறுத்​துகிறது.

கிராம பஞ்​சா​யத்​துகளை நீடித்த, நிலைத்த வளர்ச்​சியை உரு​வாக்​கும் அமைப்​பாக மாற்​று​வது எப்​படி என்​ப​தற்​கான தெளி​வான செயல்​முறையை​யும் இந்த நூல் வழங்​கு​கிறது.

ஊராட்​சித் தலை​வர் என்​பவர் யார்? அவரின் தகு​தி​கள் என்ன? என்ன திறன்​களை அவர் வளர்த்​துக்​கொள்ள வேண்​டும்? அவர் கிராமத்தை எவ்​வாறு வழிநடத்த வேண்​டும்? போன்ற கேள்வி​களுக்​குப் பேராசிரியர் பழனித்துரை ஆழமான விளக்​கங்​களை அளிக்​கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in