தத்துவ சிதறல்கள்

தத்துவ சிதறல்கள்
Updated on
1 min read

வாழ்​கை​யைப் பிர​திபலிக்​கும் கண்​ணாடியே இலக்​கி​யம் என்​பர் சான்​றோர். ச.ஆனந்​தகு​மார் எழு​திய ‘முத்​தமிடும் கூழாங்​கற்​கள்’ என்​னும் கவிதைத் தொகுப்பு வாழ்க்​கை​யின் பல்​வேறு தருணங்​களை மிக நுட்​ப​மாக அழகியலோடு வெளிப்​படுத்தி நிற்​கிறது.

அதில் நவீன மற்​றும் நகர வாழ்க்​கையை விமர்​சித்​து, அதன் கோர​முகங்​களைக் காட்டி நிற்​கும் கவிதைகள் ஏராளம். ‘தேடித்​தேடிச் சோர்ந்து போனது பறவை / மரங்​கள் தொலைந்த பெருநகரில்’ என்​பது அதன் ஒரு முகம். பல்​வேறு காட்​சிகளும் கவிதை​யாய் மாறி உள்​ளம் குழைக்​கின்​றன.

விழியற்ற தெருப்​பாடகர், மழை​யில் தவிக்​கும் பிச்​சைக்​காரர், கணக்​குத் தெரி​யாத அம்​மா, அழைப்பே வராத திறன்​பேசி​யைச் சீர்​செய்​யக் கேட்​கும் முதி​ய​வர் எனக் கனக்​கச் செய்​யும் கவிதைகளும் நிரம்பி வழிகின்​றன. அதி​லும் முது​மை​யில் ஏற்​படும் தனிமை பற்​றிய கவிதைகள் சிறப்​பானவை. மனித உணர்​வு​களை மிகத் துல்​லிய​மாக​வும் கவனத்​தோடும் கையாண்டு கவிதை செய்​துள்​ளார் எழுத்​தாளர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in