

‘மொழியும், மொழி புனையும் கோலங்களும்’ என்ற இந்த நூல் பேரா.தங்க ஜெயராமன், ‘இந்து தமிழ் திசை’, ‘அருஞ்சொல்’ மின்னிதழ், ‘தலித்’ இருமாத இலக்கிய இதழ் என வெவ்வேறு பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் ஒருசேர தொகுக்கப்பட்டுள்ளன.
அவர், இலக்கியம், மொழி, கல்வி, அரசியல் என்ற வகைமைகளில் எழுதியவை இதில் இடம்பெற்றுள்ளன. ‘இலக்கியம்’ பகுதியில் எழுத்தாளர் இமையம் படைப்புகள் தொடர்பான இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
‘செல்லாத பணம்’ நாவல் பற்றிய கட்டுரையில் அந்நாவலின் கட்டமைப்பு, அது வாசகனை என்ன செய்கிறது என்கிற அடிப்படைகளில் ஆராய்கிறது. இமையத்தின் கதைகள் எப்படிப்பட்டனவாக இருக்கின்றன என்பதைக் கூறுகிறது இன்னொரு கட்டுரை.
அதன் தலைப்பு, ‘கதையில் தன்னை கரைத்துக்கொள்ளும் கதாசிரியர் இமையம்’. பெரும்பாலும் இமையம் சமூகப் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு கதாபாத்திரங்களின் பல்வேறு விதமான உரையாடல்களின் வழியாகவே ஒரு வாழ்க்கை அனுபவத்தை நம்முன் நிகழ்த்தவிடுகிறார்; தவிர, எங்கேயும் தன்னை அதில் துருத்திக்கொள்ளவில்லை என தங்க.