

சுற்றுலா செல்கையில் பார்வையில் விழுகிற இடங்களையெல்லாம் அங்குலம் அங்குலமாக ஆராயும் ஆவல் பிறக்கும்; ஆனால், போதுமான கால அவகாசம் இல்லாமல் ‘இதெல்லாம் மனத்திரையில் நிலைத்திருக்குமா’ என்கிற கேள்வியோடு அங்கிருந்து அகல வேண்டியிருக்கும்.
அதையொத்த எண்ணவோட்டத்தைத் தரவல்லவை மொழிபெயர்ப்பு படைப்புகள். அதிபிரகாசன் தொகுத்துள்ள ‘மூன்று தலைமுறையினரின் காதல்’ சிறுகதைத் தொகுப்பில், அந்த எண்ணத்தை வலுப்படுத்தும் வகையில் அலெக்ஸாண்டிரா கொலோண்டை, ஹாருகி முராகாமி உள்ளிட்டவர்களின் படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.