மெளன மொழி பேசும் கவிதைகள்

மெளன மொழி பேசும் கவிதைகள்
Updated on
1 min read

மௌனம் என்​பது சத்​தமற்ற நிலை அல்ல, அது ஓர் ஆழமான மொழியும் வலிமை​யான ஆயுத​மும் ஆகும். ‘மெளன மொழி’ எனும் இக்​க​விதைத் தொகுப்​பில் உமை​யாள் மீனாட்​சிசுந்​தரம் 150 கவிதைகளை எழு​தி​யிருக்​கிறார்.

இதிலிருந்து தமிழர்​களின் வாழ்​வியல் தன்​மை​களை உணர முடிகிறது; சுற்​றுச்​சூழல் சார்ந்த அக்​கறையை​யும் அறிய முடிகிறது. புலம்​பெயர்ந்து வாழும் மக்​களின் ஆதங்​கத்தை இவர் ‘என் வாழ்​வு...?’ என்​கிற தலைப்​பில் எழுதுகை​யில், ‘பிறந்த மண்ணை விட்​டு/ பெற்ற தாயை விட்​டு/ ஓடி விளை​யாடிய ஊரை​விட்​டு/ தேகம் சிலிர்த்த காற்றை விட்​டு/ நாடு​விட்டு நாடு வந்​து/ சேர்​கின்ற செல்​வம் எல்​லாம்/ கோட்டை கட்டி வாழ அல்ல/ சிறு கூடு கட்டி வாழ்​வதற்​கே/ வெளி​நாட்டு மோகத்​தால்/ வாக்​கப்​பட்டு நானிங்​கிருக்க/ எனக்கு வாக்​கப்​பட்​ட​வளோ அனு​ம​தி​யின்றி (விசா இன்​றி) அங்​கிருக்க/ இளமையை மறந்து இயந்​திர​மாய் மாறி/ இன்​றையப் பொழு​தினைக் கடந்து செல்​கின்​றேன்​... இப்​படி​யாக அயல​கத்​தில் வசிக்​கும் ஒரு​வரின் வாழ்வு எதிர்​காலத்​தில் என்​ன​வாகுமோ? என்​கிற எதிர்​பார்ப்​பிலும், ஏக்​கத்​தி​லும் கடந்து செல்​கிறது’ என்​பதை வேதனையோடு இவரது கவிதை வரி​கள் பதிவு செய்​கின்​றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in