

காவிரி டெல்டா மாவட்டங்களின் வட்டார வாழ்க்கையைக் கொண்டிருக்கும் பெரும்பாலான கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. ‘தொழுவம்’ சிறுகதை, திருக்குமரன் கணேசனின் தீர்ககமான சமூகப் பார்வையை முன்வைக்கின்றது. பண்ணைவீட்டு இளையமகன் காணாமல் போனதைப் பற்றிய விசாரணையிலிருந்து கதை தொடங்குகிறது.
கூலிவேலை செய்துவாழும் குடும்பத்தின் வளர்மதி, வீட்டு சூழ்நிலையால் பண்ணையார் வீட்டு தொழுவத்தில் அம்மா செய்து வந்த தூய்மைப்பணியை செய்து வருகிறாள். அவளிடமும் போலீஸ் விசாரிக்கிறது. பண்ணையார் குடும்பத்தின் இளைய மகனுக்கும் வளர்மதிக்கும் ஏற்பட்ட நட்புறவு காதலாக மாறியவற்றை அழுதுகொண்டே கூறுகிறாள்.