கொல்லப்பட முடியாதவன் கலைஞன்

கொல்லப்பட முடியாதவன் கலைஞன்

Published on

வான்கா வாழ்ந்தும், வரைந்தும், உண்டும், அருந்​தி​யும், வாழ்ந்த ஒவ்வொரு நகரமும், கிராம​மும், சிற்றுண்​டிச் சாலைகளும், அவன் நடந்த வயல்​வெளி​களும், வானங்​களும் இப்படைப்​புக்​குள் நகர்ந்து செல்​கின்றன. இப்படைப்​பின் ஒவ்வொரு வரிக்கு இடையிலும், ஒவ்வொரு சொல்​லுக்​குப் பின்​னாலும், ஒரு நிறம் அல்லது ஓர் ஒளி ஊடாடிச் சலனிப்பதை நுட்​பமான வாசக​னால் உணர்ந்து​கொள்ள இயலும்.

நிலக்​கரிச் சுரங்​கங்​களின் காரிருள், காதலின் இளஞ்​சிவப்பு, குறுங்​காடு​களில் முகிழ்த்​திருக்​கும் செம்​பூக்​கள், மழைக்​குப் பிறகு கவியும் சோகச் சாம்பல் நிறம் எனக் காட்​சி தோறும் இறைந்து கிடக்​கும் இன்னும் ஏராளமான நிறங்​கள், கதை நகர்​வின் உணர்​வு​களோடு இயைந்து இயங்கு​கின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in