காலத்தின் குரலாக ஒரு புதிய பாய்ச்சல்

காலத்தின் குரலாக ஒரு புதிய பாய்ச்சல்
Updated on
2 min read

தமிழில் 1994இல் தொடங்​கப்​பட்டது ‘கு​திரை வீரன் பயணம்’. இது வரை மொத்​தம் 10 இதழ்​கள் வெளிவந்​துள்ளன. இவற்​றி​லிருந்​து, 1) கவிதைகள்,2) சிறுகதைகள், 3) கட்​டுரைகள், விமர்​சனங்​கள், நேர்​காணல்​கள் ஆகியன தொகுக்​கப்​பட்டு தற்போது மூன்று நூல்​களாக வெளி​யாகி​யுள்​ளன.

கவிதைகளைப் பொறுத்​தவரை பசுவய்​யா, தஞ்சை பிர​காஷ், சி.மோகன், இளமுரு​கு, விக்​ர​மா​தித்​யன், பிரம்​ம​ராஜன், மனுஷ்யபுத்​திரன், தேவ​தேவன், பாத​சா​ரி, குவளைக்​கண்​ணன், கோபிகிருஷ்ணன், எஸ்​.சுகந்தி சுப்​பிரமணி​யன், பிரான்​சிஸ் கிரு​பா, கடற்​கரய் உள்​ளிட்​டோரின் கவிதைகள் 90களுக்கே உண்​டான சீரான தரத்​தில் காண​முடிகின்​றன.

சிறுகதைகளில் அஜயன் பாலா, பெரு​மாள் முரு​கன், கோணங்​கி, கோபிகிருஷ்ணன், கூத்​தலிங்​கம் கதைகளும், மொழிபெயர்ப்​புக் கதைகளாக வைக்​கம் முகம்​மது பஷீர் (யூமா வாசுகி மொழிபெயர்ப்​பில்), சக்​காரி​யா (​சா.தேவ​தாஸ்) போர்​ஹே, கொர்த்​தஸார் (நா​கார்​ஜூன்), இடானோ கால்​வினோ(எஸ்​.சண்​முகம்). யூ நகிபீன் (க.சுப்​பிரமணி​யம்), கெஸ ஸாத் (யூமா வாசுகி) ஆகியோரின் படைப்புகளும் இடம்​பெற்​றுள்​ளன. சிற்​சில நாவல் அத்​தி​யா​யங்​களும் சிறப்​பாக வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in