உலகைப் புரிந்துகொண்ட இளம்பருவத்தின் கதை

உலகைப் புரிந்துகொண்ட இளம்பருவத்தின் கதை
Updated on
1 min read

இளம்​பருவ வாழ்க்கை வெவ்​வேறு வித​மானவை. ஹெலன் கெல்​லருக்கு மனக்​கண்​ணால் மட்​டுமே உலகை அறிந்​து​கொள்​ளும் இளம்​பரு​வம், ஆனி ப்ராங்​குக்கு இரண்​டாம் உலகப்​போரில் நாஜிக்​களிட​மிருந்து தப்​பிக்க, தலைமறை​வாக வாழ நேர்ந்த இளமைப்​பரு​வம்.

நாடோடி​யாக வாழநேர்ந்த ஃபெரியோ​வின் இளம்​பருவத்​தைப் பேசும் இந்​நாவல், மத்​திய ஆப்​பிரிக்​கா​வின் ஷாட் (Chad) நாட்​டில் நடந்த போர்ச்​சம்​பவங்​களை பேசுகிறது.

மணலும் புழு​தி​யு​மான நிலப்​பரப்​பில் மைனாக்​கள், காட்​டுக்​குருவி​கள், கருஞ்​சிலந்​தி​கள் என இயற்கை உறவு​களில் திளைப்​பவ​னாக இருக்​கிறான் சிறு​வன் ஃபெரியே. தனது இளம்​பரு​வம் முழு​வதும் நிறைய கேள்வி​கள் அவனுக்கு எழுந்​து​கொண்​டே​யிருந்​தன.

பல்​லி ஏன் பச்​சை​யாக இருக்​கிறது? வண்​டுக்கு ஏன் நான்கு சிறகு​கள்? பட்​டாம்​பூச்​சிக்கு ஏன் இரண்டு மட்​டும்? இந்த மணல் எங்​கிருந்து வரு​கிறது? மழை என்​றால் என்ன? என கேள்வி​கள் நீள்​கின்​றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in