

இருபதாம் நூற்றாண்டில் பிறந்து (1924), இருபத்தியோராம் நூற்றாண்டில் மறைந்த (2018) மு.கருணாநிதி எனும் இலக்கிய-சமூக-அரசியல் ஆளுமையின் செயல்பாடுகளை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் நோக்கில் எழுதப்பட்டுள்ள நூலிது.
கவிதை, நாடகம் எழுதுவதில் நாட்டம் கொண்டிருந்த கருணாநிதி, தனது 14வது வயதில், நீதிக்கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, சமூக-அரசியல் இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டு, 80 ஆண்டுக்காலங்கள் தொடர்ந்து செயலாற்றிய பெருமைக்குரியவர்.