

கொலைக் குற்றச்சாட்டில் சிக்க வைக்கப்படும் ஓர் இளம் வணிகருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. 26 ஆண்டுகள் சிறையிலேயே கழிகின்றன. அவரது நற்பண்புகளுக்காக அதிகாரிகள் தொடங்கி சகச் சிறைவாசிகள் வரைக்கும் அவரை மதிக்கிறார்கள்.
இடைப்பட்ட காலத்தில் மனைவியும் குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்றே அவருக்குத் தெரியாது. ஒரு சிறு திருட்டு வழக்கில் அதே சிறையில் அடைக்கப்படும் ஒருவர்தான் உண்மையான கொலையாளி என்பது வணிகருக்குத் தெரிய வருகிறது.