

ஈழத்துத் தமிழ்க் கவிஞர்களில் தலையாய கவிஞர் சு.வில்வரத்தினம். இவரது வரிகளை, காலவெயிலில் ஆவியாகிப் போகாதவண்ணம் தொகுத்திருக்கிறது விடியல் பதிப்பகம்.
வில்வரத்தினத்தின் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், நூல் விமர்சனங்கள், பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் ஆகியவற்றைக் கோத்து மாலையாக்கித் தந்திருக்கின்றனர்.
“வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்று நம்பிய சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்” என இவரைக் குறித்து முன்னுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் நிலாந்தன்.