

இலக்கியத்தையும் சுற்றுலாவையும் வரலாறு என்கிற கண்ணி மூலம் இணைத்துப் பேசுகிறது இந்நூல். இதன் ஆசிரியர் சு. பகவதி அப்பன், ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்; கேரளத்தில் பண்பாட்டுப் புலத்தில் மதிக்கப்படுகிற திருவனந்தபுரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவரும்கூட.
ஒரே பிரச்சினைக்குத் தீர்வு காண இரு வேறு வழிகளில் உழைத்த நாராயண குருவையும் பெரியாரையும் இணைத்து அணுகும் கட்டுரை முக்கியமான ஒன்று. கனவுகள் மூலம் தகவல் பரிமாற்றம் என்பது நாட்டுப்புற இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஓர் அம்சம்.